உதிரத்தின் உறவல்ல - இது
உள்ளத்தின் உயர் உறவு
நதிமூலம் தேடிடாது நம்..
நலன் காக்கும் நல்லுறவு!!
வாடித் துடித்திருந்தால் - நம்
வாயில் வந்து நிற்கும்...
சாடினாலும் சகித்திருக்கும்!!
சங்கீதமாய் இனித்திருக்கும்!!
தாகத்தின் தண்ணீராய் - என்றும்
தன்னலம் மறந்து வரும்!!
சிநேகத்தில் சிறகடிக்க..
சீராக சேர்ந்திருக்கும்!!
உற்ற நட்பு உடனிருக்க-நம்மை
ஊழ்வினையும் நெருங்காது !!
காலை வணக்கம்!!
No comments:
Post a Comment