Tuesday, 16 July 2019

புடவை

வண்ணவண்ண நூல் கோர்த்து..
வடித்து வைத்த வகைக் கண்டு..
எண்ணமோ ஏங்கி நிற்கும்!!
எடுத்துடுத்த ஆசை வரும்!!

சேர்த்து வைத்த கொசுவங்களோ..
செழித்தாடி அழகு தரும்!!
போர்த்தி நின்ற முந்தானை!!
பொழியும் நீர் ஒத்திருக்கும்!!

பட்டாகி பளபளக்கும்!!
பருத்தியது பதமளிக்கும்!!
எட்டு கஜம் எழிலாகி...
ஏறெடுத்துப் பார்க்கத் தூண்டும்!!

அம்மா வாசனை அதிலுமுண்டு_அவள்
அழுக்கோடு அணைத்தாலும் ஆனந்தமுண்டு!! காலை வணக்கம்!!

No comments:

Post a Comment