குழந்தையென பிறக்கும்போதே..
கொடுத்து வைத்த குலமன்றோ..
அழகுக்கும் அன்பினுக்கும்..
அடுத்த பொருள் அவளன்றோ..
அன்னையாய் அரவனைத்து..
அக்காளாய் அன்பு தந்து..
சின்னத்தங்கை எனப்பிறந்தும்..
சிக்கல்களில் துணை நின்று..
மகளாகி மகிழ்வு தந்து..
மனைவியாகி மாண்பளித்து..
அகமகிழச் செய்யும் நம்..
அறிவையரைப் போற்றிடுவோம்!!
பெண்மை போற்றுவோம்!!
பெருமிதம் கொள்வோம்!!
இனிய மகளிர் தின வாழ்த்துகள்!!
No comments:
Post a Comment