அடுக்கி வைத்தப் பெட்டிகள்..
அசைந்து ஆடி நகருதே!!
இடையில் கேட்கும் ஓசையோ-குயில்
இசையைப் போல இனிக்குதே!!
தனிமையான பாதைதனில்!!
தடைகளின்றி ஓடுதே!!
இனிய சன்னல் காற்றுக்கு-ஒரு
ஈடு இணை இல்லையே!!
சேர்ந்திடாத பாதை மீது..
செல்லும் இலக்கு நோக்கியே!!
ஊர்ந்து செல்லும் உனதழகு-என்றும்
உலுக்கிடும் என் உள்ளமே!!
தாலாட்டும் தனிப்பயணம்!!
தண்டவாளத் துணையுடன்!!
நற்காலை வணக்கம்!!!
No comments:
Post a Comment