பிம்பங்களின் பிறப்பிடமே!!
பிழையில்லாப் பெட்டகமே!!
அமைதியின் அழகியலே!!-அருகே
அழைத்திடும் ஆனந்தமே!!
நிறமில்லா நிதர்சனமே!!
நிசம்காட்டும் நித்தியமே!!
உறவான ஒளிப்பிழம்பே!- அவர்
உசிதமான உருவகமே!!
சிரித்தால் சிரித்திருப்பாய்!!
சிலநேரம் ரசித்திருப்பாய்!!
உரித்தாய் உனைப்பெற்றோர் - தம்
உலகமாய் ஆகிடுவாய்!!
எனக்கே எனைக் காட்டும்..
எழில் சூழ் ஏகாந்தம் நீ!!
அன்பு காலை வணக்கம்!!
No comments:
Post a Comment