என் எண்ணத்தின் வெளிப்பாட்டை
எழிலாக எடுத்துரைக்க..
அன்னைத் தமிழிவளை-உடன்
அழைத்தே அடி எடுத்தேன்!!
விந்தையான விமர்சனங்கள்..
விரைந்தோடி வந்திடினும்!!
முந்தவே முயல்கின்றேன்-சில
முரண்களைத் தள்ளி விட்டே!!
ஊக்குவிப்போர் உயர்த்திவிட..
உளமகிழ்ந்து உழைத்திடுவேன்!!
ஆக்கிடவே விழைகின்றேன்-நெஞ்சை
அள்ளும் அழகுத் தமிழ்க்கவிதை!!
ஆதவன் ஒளி பரப்ப....
அகிலத்தில் அது சேர....
அன்பு காலை வணக்கம்!!
No comments:
Post a Comment