Tuesday, 16 July 2019

கோலம்

புள்ளிகளால் பூத்த பூக்கள்!!
புன்னகைத்து நின்றனவே!!
வெள்ளை இழைக்கோட்டினாலே..
வெளிவந்த வேய்ங்குழல்கள்!!
மயில்கள் ஆடும் மகத்துவமும்..
மான்கள் ஓடும் மாண்புகளும்..
கயல்கள் துள்ளும் காட்சிக்கும்..
கன்னிப் பெண்கள் கைவண்ணம்!!
பக்குவமாய்ப் பார்த்திழைக்கும்..
பாந்தம் நிறை பவித்திரங்கள்!!
சிக்கலிழைச் சித்திரங்கள்!!
சிந்தை கவர் முத்திரைகள்!!
வாசல் வண்ண ஜாலங்கள்!!
வகை செரிந்த கோலங்கள்!!
காலை வணக்கம்!!!

No comments:

Post a Comment