Tuesday, 16 July 2019

கடிகாரம்

கண்ணாடிப் பேழைக்குள்..
கட்டுண்ட மணித்துளிகள்!!
எண்களான நேரங்கள்..
எட்டாத உயரத்தில்!!

ஒருகால் சிறுத்திருந்தும்..
ஓட்டமோ நிற்பதில்லை!!
பிரிவுகள் நேர்ந்தாலும்..
பிடிமானம் அகல்வதில்லை!!

அடிக்கடி உனைப்பார்த்தும்..
அவசியம் தீருவதில்லை!!
துடிக்கின்ற இதயம்போலே..
துவண்டு நீ துயில்வதில்லை!!

காலம் காட்டும் கருவியே!!
ஞாலம் ஆளும் ஞானியே!!
அன்பு காலை வணக்கம்!!

No comments:

Post a Comment