வாசலிலே வண்ணக்கோலம்..
வகையாய் வரவேற்க..
ஊசலாடும் தோரணங்கள்..
உகந்தாடி உபசரிக்க..
மூலிகைப் புகைக்காற்று..
முழுசுவாசம் புகுந்துவர..
பாலும் பொங்கிக்கொட்ட..
பழமைகள் பறந்தோட..
ஆனவம் அகன்றோட..
அத்வைத ஒலிபரவ..
புனிதமாய் நிகழ்ந்ததங்கு..
புதுமனைப் புகுவிழா!!
இல்லமென்னும் இருப்பிடம்..
இன்னிசையாய் இனித்திடும்!!
காலை வணக்கம்!!!
No comments:
Post a Comment