கல்வியெனும் கலைச்செல்வம்-அதை
கற்பிப்போரும் நம் தெய்வம்
எல்லையில்லா உயர்நிலைக்கு-நமை
ஏற்றிவிடும் ஏணிகளாம்
தாயின் மொழியெனினும்-அதை
தவறின்றி நாம் கற்க..
தூய மனம்கொண்டு-உடன்
துவளாமல் துணை நிற்பர்!!
அறிவுச் சுடர்கொண்டு-பல
ஆயிரம் விளக்கேற்றிடுவர்!!
சிறகடைந்து சிகரம் தொட்டும்-நாம்
செய்நன்றி காட்டி நிற்போம்!!
மாசிலாத மனம் கொண்ட..
ஆசிரியர் அடி பணிவோம்!!
இனிய காலை வணக்கம்!!!
No comments:
Post a Comment