Saturday, 13 July 2019

மடமை

அற்புதமாம் தமிழ் மொழியை..
அறியேன் என்றுரைத்திட்டால்..
பெற்றெடுத்த தாயவளின்..
பெயரறியேன் என்பதாகும்..
கற்றிடக் கனியவைக்கும்.. கண்ணான மொழியிவளை-கற்க
முற்றிலும் முயலாதவர்..
மூடரென்றே ஆவர்!!
மற்ற மொழி பலவறிந்தும்..
மண்ணின் மொழியறியாதோரை..
வற்றிட்டக் கேணி என்றே..
வையம் உரைத்திடுமே!!!
எண்ண எண்ண இனிக்கும்..
அன்னைத் தமிழிதனைக்..
கண்னெனக் காப்பதனைக்..
கடமை எனக்கொள்வோம் !!!
இனிய காலை வணக்கம்!!

No comments:

Post a Comment